தமிழ்நாடு செய்திகள்

திருவாரூரில் பிரம்மாண்ட மாலை மரியாதையை ஏற்றுக் கொண்ட விஜய்

Published On 2025-09-20 17:09 IST   |   Update On 2025-09-20 17:09:00 IST
  • இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
  • நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News