தமிழ்நாடு செய்திகள்

முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-06 09:46 IST   |   Update On 2026-02-06 09:46:00 IST
  • ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
  • மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் விவரம் வருமாறு:

* ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ.42.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்களை தொடங்கி வைக்கிறார்.

* நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி முதல் கொடமலை வரை ரூ.34.12 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை தொடங்கி வைக்கிறார்.

* ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

* தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,238.19 கோடி மதிப்பீட்டில் கட்டிய 9,696 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.

* கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் கடல் ஆமை மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை 2026ஐ வெளியிடுகிறார்.

* பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.348.59 கோடியில் கட்டப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கிறார்.

* மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

* கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி முதலீட்டில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிட்சுபிஷியின் குளிர்சாதன இயந்திரம், கருவி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். 

Tags:    

Similar News