விஜய் 0 மாதிரி, தனியா இருந்தா மதிப்பு கிடையாது - பாஜக மூத்த தலைவர் தமிழிசை
- தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை.
- NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், "ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.
இதற்கு விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசைஇடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை. தனித்து விடப்பட்டதால் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர் இப்படி பேசுவதால் NDA கூட்டணியின் பலம் குறைந்துவிட போவதில்லை. NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். போட்டி என்பது திமுக கூட்டணிக்கும் NDA கூட்டணிக்கும் தான்.
விஜய்க்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ன்னம் இருந்தது என்றால்... விஜய் ஒரு 0 மாதிரி... தனியா இருந்தா மதிப்பு கிடையாது. ஆனால் அதே 0 ஒருவர் கூட இருந்தால் அதுக்கு மதிப்பு உண்டு.
NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.