தமிழ்நாடு செய்திகள்
10, 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
- அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்.
- தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு 93.80 சதவீத மாணவர்களும், 11-ம் வகுப்பில் 92.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.