தமிழ்நாடு செய்திகள்
பரங்கிமலை அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
- பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
- எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.