தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் 2 நாட்கள் ரோடு ஷோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-04 17:28 IST   |   Update On 2025-05-04 17:28:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8,9ம் தேதிகளில் அவர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது திருச்சியில் 2 நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே செல்கிறார்.

மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News