தமிழ்நாடு செய்திகள்

இறப்பிலும் இணைபிரியாத 67 வருட திருமண பந்தம்.. மனைவி இறந்த மறுநாளே கணவனும் மரணம்

Published On 2025-02-10 21:48 IST   |   Update On 2025-02-10 21:48:00 IST
  • 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக நள்ளிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
  • மறுநாள் வீராயியின் கணவர் முத்து அம்பலமும் (85) தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் 80 வயது மூதாட்டி வீராயி, வயது மூப்பு காரணமாக பிப்ரவரி 8 நள்ளிரவு உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்;

இந்நிலையில் இவருடைய கணவரான 85 வயதுடைய முத்து அம்பலம் மனைவியின் பிரிவு தாங்காது தவித்த நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News