தமிழ்நாடு செய்திகள்
S.I.R. விவகாரம்- முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
- சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
- 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.