தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. சொல்லியே அ.தி.மு.க.-விலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க முயற்சித்தேன் - செங்கோட்டையன்

Published On 2025-11-07 13:18 IST   |   Update On 2025-11-07 13:18:00 IST
  • யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.
  • எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஈரோடு:

அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.

* சாதாரண பெண்ணுக்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி.

* ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் நடந்த கொலைக்காக சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்?

* பா.ஜ.க. என்னை அழைத்து கூட்டணிக்காக பேச வேண்டும் என கூறினர்.

* என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க. பேசியது.

* எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றார். 

Tags:    

Similar News