தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க.வில் இ.பி.எஸ். குடும்பத்தினரின் ஆதிக்கம் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு
- மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.
- அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் 53 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது.
* இ.பி.எஸ். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகம் இருக்கிறது. மகன், மைத்துனர், மருமகன் தலையிடுகிறார்கள். மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும்.
* மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம்.
* அ.தி.மு.க.வில் பலரிடம் பேசி வருகிறேன்.
* யார் யாரிடம் பேசுகிறேன் என்பதை தெரிவித்தால் அவர்களுக்கு ஆபத்து.
* தனது அடுத்தகட்ட நகர்வுகளால் நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.