தமிழ்நாடு செய்திகள்

Gas Shortage | மத்திய அரசை கண்டித்து காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

Published On 2026-03-12 12:12 IST   |   Update On 2026-03-12 12:12:00 IST
  • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
  • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மத்திய அரசை கண்டித்து கோவையில் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Tags:    

Similar News