தமிழ்நாடு செய்திகள்
பா.ஜ.க.-வோடு எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது ஏன்? - சீமான் விளக்கம்
- என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம்.
- சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.
என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.க.வோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.