தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.-வில் குழப்பம் - தி.மு.க. காரணம்? : அன்புமணி கூறியது அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்

Published On 2025-06-19 12:56 IST   |   Update On 2025-06-19 12:56:00 IST
  • அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.
  • போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.

சென்னை:

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தி.மு.க. தான் காரணம் என அன்புமணி பேசியிருந்தது குறித்து...

பதில்: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்.

கேள்வி: அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே?

பதில்: அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.

கேள்வி: மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

பதில்: போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார். 

Tags:    

Similar News