அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை- ராமதாஸ் காட்டம்
- மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.
- மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அப்போது , ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்தார். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். அய்யாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன், தொலைத்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அய்யாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என பேசிய அன்புமணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
* அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை.
* மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.
* மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.