அன்புமணி சூது செய்து கட்சியை பறிக்க முயல்கிறார்- ராமதாஸ் குற்றச்சாட்டு
- அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.
- பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.
* தைலாபுரம் இல்லத்திற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை.
* கட்சியை உறிஞ்சி எடுத்து, நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிக்கிறார்.
* அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.
* அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க கூறினேன்.
* களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார் அன்புமணி.
* நான்தான் தலைவர் என்று சொல்லி கொண்டு என்னவெல்லாமோ செய்கிறார் அன்புமணி.
* பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.
* பை பையாக பொய்களை வைத்துள்ளார் அன்புமணி. வாய் கூசாமல் பொய் சொல்வார் அன்புமணி.
* அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார்.
* பா.ம.க.வின் நிறுவனரும், தலைவரும் நானே என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.