தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி சூது செய்து கட்சியை பறிக்க முயல்கிறார்- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2025-08-07 11:13 IST   |   Update On 2025-08-07 11:13:00 IST
  • அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.
  • பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.

* தைலாபுரம் இல்லத்திற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை.

* கட்சியை உறிஞ்சி எடுத்து, நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிக்கிறார்.

* அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.

* அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க கூறினேன்.

* களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார் அன்புமணி.

* நான்தான் தலைவர் என்று சொல்லி கொண்டு என்னவெல்லாமோ செய்கிறார் அன்புமணி.

* பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

* பை பையாக பொய்களை வைத்துள்ளார் அன்புமணி. வாய் கூசாமல் பொய் சொல்வார் அன்புமணி.

* அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார்.

* பா.ம.க.வின் நிறுவனரும், தலைவரும் நானே என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

Similar News