தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்- அன்புமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் #RajyasabhaElection

Published On 2026-03-05 08:46 IST   |   Update On 2026-03-05 08:46:00 IST
  • அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.
  • வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.

அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

Tags:    

Similar News