தமிழ்நாடு செய்திகள்

வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காத வகையில் ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம் - பிரேமலதா இரங்கல்

Published On 2025-06-05 14:14 IST   |   Update On 2025-06-05 14:14:00 IST
  • 18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
  • வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, அந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காத வகையில் ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேமுதிக சார்பில் இறைவனை வேண்டி.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News