தமிழ்நாடு செய்திகள்

ஜனவரி 5ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- தே.மு.தி.க. அறிவிப்பு

Published On 2026-01-01 14:58 IST   |   Update On 2026-01-01 14:58:00 IST
  • தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 5ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட அளவில் தொண்டர்களிடம் கொண்டு செல்வது என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News