தமிழ்நாடு செய்திகள்

ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் - வேலூரில் பரபரப்பு

Published On 2025-06-06 11:48 IST   |   Update On 2025-06-06 11:48:00 IST
  • டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலூர்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி இடையே கட்சி பூசல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

நேற்று தைலாபுரத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி அந்த கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வேலூர் மாநகர் பகுதி மற்றும் குடியாத்தம், அணைக்கட்டு பள்ளி கொண்டா, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டிகளில் அய்யா தான் அடையாளம்.. அய்யா தான்... அதிகாரம் அய்யா தானே எல்லாம். சிறை சென்றவனே தலைவன் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.

டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அன்புமணி கூட்டிய கூட்டங்களில் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 80 சதவீதத்திற்கும் மேல் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது கட்சியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News