தமிழ்நாடு செய்திகள்

பாஜக - அதிமுக கூட்டணி: ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டீர்களா? - பொன்னையன்

Published On 2025-04-13 08:55 IST   |   Update On 2025-04-13 08:55:00 IST
  • மும்மொழிக்கொள்கையை அவர்கள் திணிக்காமல் இருக்கலாம்.
  • மூழ்கிற கப்பலில் இருந்து அதிசயங்கள் நடக்கலாம் அல்லவா... பார்ப்போம் என்றார்.

பொன்னேரி:

தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி உள்ளது. இக்கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய போது அ.தி.மு.க. தலைவர்கள் பேசியதும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. கடலில் மூழ்கும் கட்சி. அதனுடன் சேர மாட்டோம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் கூறியிருந்தார். இதுகுறித்து பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொன்னையன், அதுதான் உலக அரசியல். அதுதான் இந்திய அரசியல். அதுதான் நாட்டின் அரசியல்.

பொறுத்திருந்து பாருங்கள். சூழல் மாறும் அரசியலிலே. கொள்கை மாறும். ஒரு திருடன் நல்லவனாக, ஒழுக்கமானவனாக மாறி ஒரு அற்புதமான மனிதனாக மாறிவிட்டால் அவரை மன்னிக்க மாட்டீர்களா? அதனால நல்லவர்களாக மாறலாம். மும்மொழிக்கொள்கையை அவர்கள் திணிக்காமல் இருக்கலாம். என்னன்னமோ நடக்கலாம். பொறுத்து இருந்து பாருங்கள். மூழ்கிற கப்பலில் இருந்து அதிசயங்கள் நடக்கலாம் அல்லவா... பார்ப்போம் என்றார். 

Tags:    

Similar News