தமிழ்நாடு செய்திகள்

VIDEO: முதியவரின் கடையை சூறையாடிய காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Published On 2026-02-18 12:23 IST   |   Update On 2026-02-18 12:23:00 IST
  • நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
  • தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் அண்மையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

அப்போது தன்னுடைய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற இடத்தில் தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதியவரின் கடையை எட்டி உதைத்து கீழே தள்ளிய காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News