தமிழ்நாடு செய்திகள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
- மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.
* அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.
* நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.
* அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
* அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.
* மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
* மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
* அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.