தமிழ்நாடு செய்திகள்
null

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்- தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2026-02-18 10:43 IST   |   Update On 2026-02-18 11:29:00 IST
  • திமுகவில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வரும் 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மேல்சபை எம்.பி.க்களின் (மாநிலங்களவை) பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். 10 மாநிலங்களில் உள்ள 37 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது.

இந்தநிலையில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, மராட்டியம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி நடை பெறுகிறது.

தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் இடம் காலியாகுகிறது.

தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வ ராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரது பதவி காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை, மற்றும் அ.தி.மு.க. சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த 6 மேல்சபை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.

போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். மார்ச் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 20-ந்தேதி முடிவடையும்.

மாராட்டியம் மாநிலத்தில் 7 மேல்சபை எம்.பி.க்கள், ஒடிசாவில் 4 உறுப்பினர்கள், மேற்கு வங்காளத்தில் 5 எம்.பி.க்கள் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.

அசாம் (3), பீகார் (5), சத்தீஸ்கர் (2), அரியானா (2), இமாச்சலபிரதேசம் (1), தெலுங்கானா (2) ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 9-ந்தேதி முடிவடைகிறது.

இந்த 9 மாநிலங்களில் காலியாகும் 31 மேல்சபை எம்.பி.க்களின் தேர்தலும் மார்ச் 16-ந்தேதி நடக்கிறது.

Tags:    

Similar News