தமிழ்நாடு செய்திகள்
ஓரணியில் தமிழ்நாடு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் செல்ல இருக்கிறோம்- மு.க.ஸ்டாலின்
- பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.
- ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு இன்று எதிர்கொள்வது அரசியல் பிரச்சனை அல்ல. உரிமைப் பிரச்சனை.
* பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.
* ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் நேரடியாக செல்ல இருக்கிறோம்.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை.
* ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
* அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.