தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. - பா.ஜ.க. எனும் தோல்விக்கூட்டணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published On 2025-04-12 11:03 IST   |   Update On 2025-04-12 11:03:00 IST
  • தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.
  • பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, 'எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்' என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* 2 ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

* அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல் தான்.

* அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

* தோல்விக்கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

* தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.

* பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க. தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தனது சதித்திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறது.

* பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

* சுயமரியாதையின்றி டெல்லியில் மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News