தமிழ்நாடு செய்திகள்
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
- இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
* இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
* மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.