தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
- 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
* சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
* மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.