தமிழ்நாடு செய்திகள்

கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா? - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On 2025-09-14 08:44 IST   |   Update On 2025-09-14 08:44:00 IST
  • திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி:

திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்து எந்த வளர்ச்சியும் இல்லை என த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பட்டியலிட்டு கூறியதாவது:-

* கேக்கலையா கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா?

* திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

* கல்லூரி, டைடல் பார்க், அங்காடி, பேருந்து முனையம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* திருச்சியில் நூலகம், அறிவுசார் மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.  

Tags:    

Similar News