தமிழ்நாடு செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மினி பஸ் டிரைவர் போக்சோவில் கைது

Published On 2025-05-22 14:58 IST   |   Update On 2025-05-22 14:58:00 IST
  • தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
  • வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

திருப்பூர்:

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.

Tags:    

Similar News