தமிழ்நாடு செய்திகள்

மடிக்கணினி வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

Published On 2026-01-04 09:48 IST   |   Update On 2026-01-04 09:48:00 IST
  • உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நாளை தொடங்குகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News