அதிகாரப் பகிர்வு தேவை... தொகுதி பங்கீட்டில் பேரம் பேசும் கட்சியாக வி.சி.க. இருக்காது - திருமாவளவன்
- தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.
- தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - வி.சி.க. இடையே முதற்கட்ட தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கியது. வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தி.மு.க. உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எங்களின் விருப்பம் என்ன என்பதை தெரிவித்துள்ளோம். முதல்வரிடம் பேசிய பிறகு தி.மு.க. குழு மீண்டும் அழைக்கும்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வலிமைக்கேற்ப இடங்கள் வேண்டும் என்று தி.மு.க.விடம் கேட்டிருக்கிறோம்.
* தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் பேரம் பேசும் கட்சியாக விசிக இருக்காது. விசிக பேரம் பேசும் கட்சியல்ல.
* முதலமைச்சருடன் பேசிய பின்னர் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.
* தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.
* புதுச்சேரியில் தனித்தொகுதியும் வேண்டும், பொதுத்தொகுதியும் வேண்டும்.
* தொகுதிப் பங்கீட்டில் அதிகாரப் பகிர்வு தேவை.
* ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. தொகுதி ஒதுக்கீட்டில் தான் கேட்கிறோம்.
* தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.
* தமிழகத்தை பொருத்தவரை மோடி வித்தை எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.