தமிழ்நாடு செய்திகள்

அதிகாரப் பகிர்வு தேவை... தொகுதி பங்கீட்டில் பேரம் பேசும் கட்சியாக வி.சி.க. இருக்காது - திருமாவளவன்

Published On 2026-03-02 11:46 IST   |   Update On 2026-03-02 11:46:00 IST
  • தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.
  • தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - வி.சி.க. இடையே முதற்கட்ட தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கியது. வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தி.மு.க. உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எங்களின் விருப்பம் என்ன என்பதை தெரிவித்துள்ளோம். முதல்வரிடம் பேசிய பிறகு தி.மு.க. குழு மீண்டும் அழைக்கும்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வலிமைக்கேற்ப இடங்கள் வேண்டும் என்று தி.மு.க.விடம் கேட்டிருக்கிறோம்.

* தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் பேரம் பேசும் கட்சியாக விசிக இருக்காது. விசிக பேரம் பேசும் கட்சியல்ல.

* முதலமைச்சருடன் பேசிய பின்னர் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.

* தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.

* புதுச்சேரியில் தனித்தொகுதியும் வேண்டும், பொதுத்தொகுதியும் வேண்டும்.

* தொகுதிப் பங்கீட்டில் அதிகாரப் பகிர்வு தேவை.

* ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. தொகுதி ஒதுக்கீட்டில் தான் கேட்கிறோம்.

* தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.

* தமிழகத்தை பொருத்தவரை மோடி வித்தை எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News