தமிழ்நாடு செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் - அண்ணாமலை

Published On 2026-03-02 09:32 IST   |   Update On 2026-03-02 09:32:00 IST
  • பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள்.
  • நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள். அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News