தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைவர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய ராகுல் காந்தி

Published On 2025-09-29 10:37 IST   |   Update On 2025-09-29 10:37:00 IST
  • ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
  • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜயிடம் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி த.வெ.க. தலைவர் விஜயிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜயிடம் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News