தமிழ்நாடு செய்திகள்

மனிதநேய அடிப்படையில்தான் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது- மா.சுப்பிரமணியன் விளக்கம்

Published On 2025-10-15 12:30 IST   |   Update On 2025-10-15 12:30:00 IST
  • 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.
  • 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது.

சென்னை :

தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-

* இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது.

* 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.

* 5 மேசைகளில் உடற்கூராய்வு நடைபெற்றது. 14 மணி நேரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.

* உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

* குஜராத் விமான விபத்தின் போது 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு நடந்து முடிந்தது.

* உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார்.

Tags:    

Similar News