தமிழ்நாடு செய்திகள்

கோவில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசு வேலை- நியமன ஆணை வழங்கிய கனிமொழி எம்.பி.

Published On 2024-12-07 18:11 IST   |   Update On 2024-12-07 18:11:00 IST
  • தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதய குமார் மற்றும் உயிரிழந்தார்.
  • உயிரிழந்த பாகனின் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேகர்பாபு வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

பின்னர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதனையடுத்து யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கினார். 

Tags:    

Similar News