தமிழ்நாடு செய்திகள்

கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

Published On 2025-12-10 13:59 IST   |   Update On 2025-12-10 13:59:00 IST
  • கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?
  • அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

வானகரம்:

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்டுகும் நிலையில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.

* போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல்.

* தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

* தி.மு.க.வில் ஊழல் வழக்கு உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள்.

* கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்?

* அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அச்சம் ஏன்?

* யாரையோ காப்பாற்றுவதற்காக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.

* கள்ள ஓட்டுக்களால் தி.மு.க. வெற்றி பெற்றதால் SIR என்றாலே அலறுகிறார்கள்.

* வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

* இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு கொண்டோர் தான் நீக்கப்படுகின்றனர்.

* தி.மு.க. கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?

* பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் முதலமைச்சரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

* பா.ஜ.க. குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது, அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார்.

* அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு நடந்த போது கீழ் தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

* தி.மு.க. என்பது ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

* அமைச்சர் துரைமுருகனும் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர் தான்.

* அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாதது ஏன்?

* அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் பதவியில் அமர முடியும்.

* இந்த கூட்டத்தில் உள்ள பல பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

* அ.தி.மு.க.வுக்கு விழக் கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* தைத்திருநாளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News