தமிழ்நாடு செய்திகள்

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல! நீக்கப்பட்டவர்கள்! - இ.பி.எஸ்.

Published On 2025-11-01 12:42 IST   |   Update On 2025-11-01 12:42:00 IST
  • ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
  • அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

சேலம்:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* கிட்டத்தட்ட 6 மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானதாக இருந்தது.

* ஜெயலலிதா விசுவாசியாக இருந்தால் செங்கோட்டையன் ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

* நான் முதலமைச்சராக ஆன பின்னர் தான் செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானார்.

* ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.

* ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.

* குற்றவாளி சசிகலா, தப்பித்தது தமிழகம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

* அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

* சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.

* அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

* அ.தி.மு.க.வின் சட்டவிதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா?

* அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

* அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை.

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Tags:    

Similar News