தமிழ்நாடு செய்திகள்

என்னிடம் கேட்காதீர்கள்... என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published On 2025-04-21 11:32 IST   |   Update On 2025-04-21 13:14:00 IST
  • கூடலூர் தொகுதியில் சிறிய ஐடி பார்க் அமைத்து தருமாறு அதிமுக MLA ஜெயசீலன் கோரிக்கை
  • இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பேசுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுரை

சட்டப்பேரவையில் இன்று கேள்வி, பதில் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நிறுவனங்கள் கிடையாது. ஆகவே எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தருமாறு அரசு முன்வர வேண்டும்

எனது துறையில் உள்ள சிக்கல்களை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் எனது துறையில் செயல்படுவதில்லை. அதில் சிறிய பங்கு தான் எனது துறையின் கீழ் வருகிறது. மற்றவை தொழில்துறையின் கீழ் தான் வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறோ அவரிடம் கேட்டால் அவர் செய்து தருவார் என்று கருதுகிறேன். என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, "இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார்.

Full View
Tags:    

Similar News