தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய மரணம்: திமுக அரசுக்கு அச்சம் ஏன்? அதிமுக கேள்வி

Published On 2025-06-19 18:21 IST   |   Update On 2025-06-19 18:21:00 IST
  • எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக.
  • உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

eகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி CBI விசாரணை தான் என மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக..

அஇஅதிமுக-வின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

அதிலும் நீதிமன்றத்திடம் திமுக அரசு குட்டு தான் வாங்கியது என்றாலும், எதற்காக மேல்முறையீடு செய்தது கள்ளச்சாராய திமுக மாடல் அரசு? இதில் அச்சம் ஏற்பட என்ன காரணம்?

அன்றே மக்களின்குரலாய் எடப்பாடியார் கேட்ட கேள்வி!

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News