தமிழ்நாடு செய்திகள்

தஞ்சையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- கலெக்டர் உத்தரவு

Published On 2025-06-14 14:59 IST   |   Update On 2025-06-14 14:59:00 IST
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
  • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (ஞாயிற்றுகிழமை), நாளைமறுநாள் (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News