தமிழ்நாடு செய்திகள்
தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் உண்டு: முதலமைச்சர் ஸ்டாலின்
- கோவையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
- இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கோவை:
கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
புதிதாக முதலீடு செய்பவர்களை வரவேற்கிறேன். மீண்டும் முதலீடு செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணை நிற்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.
மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம் என
தெரிவித்தார்.