தமிழ்நாடு செய்திகள்
பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.
விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் உள்ளிட்டவற்றிற்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.