தமிழ்நாடு செய்திகள்

ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல்: முதலமைச்சர் கூறுவது பச்சை பொய்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-10-30 14:28 IST   |   Update On 2025-10-30 14:28:00 IST
  • விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
  • தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.

அப்போது அவர் கூறியதாவது:-

தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அப்படி என்ன அவதூறு கூறினேன் என முதலமைச்சர் விளக்கமளியக்க வேண்டும்.

விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

அமைச்சர் சக்கரபாணி கூறியது போல் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தினமும் 2000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி இருக்காது.

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.

திமுக ஆட்சியின் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய்.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News