தமிழ்நாடு செய்திகள்

10 பேர் உயிரிழப்பு- மன்னிப்பு கேட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

Published On 2025-06-04 18:19 IST   |   Update On 2025-06-04 18:19:00 IST
  • 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
  • 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை காணும் ஆர்வத்தில் வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும், "பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால்தான் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது" என்றார்.

Tags:    

Similar News