சட்டசபையில் ஆளுநர் சொந்த கருத்தை திணித்து பேசவில்லை- அண்ணாமலை
- திமுக அரசு கொடுத்த உரையில் உள்ள பொய்யான விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார்.
- அவர்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை என்பதுதான் திமுகவினரின் பிரச்சனை.
திண்டுக்கல்:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் எங்களுக்கும் திருப்தி இல்லை. ஏனென்றால் அவர் பல இடங்களில் திமுகவையும் ஆட்சியையும் பாராட்டி பேசியிருக்கிறார். திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை. திமுக அரசு கொடுத்த உரையில் உள்ள சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அவை பொய்.
அவர்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை என்பதுதான் திமுகவினரின் பிரச்சனை. திமுக கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார் என்பது பாஜகவின் பிரச்சனை.
அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் சட்டசபையில் படிப்பது என்பது மரபு. ஆனால் உண்மை நிலையை கொடுக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். கொடுக்கப்பட்டுள்ள தகவல் சரியா? என்பதை சரிபார்த்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.