தமிழ்நாடு செய்திகள்

கரூர், கோவை, நெல்லை, மதுரையில் கனிமொழி 6 நாட்கள் பிரசாரம்

Published On 2024-03-25 09:05 IST   |   Update On 2024-03-25 09:05:00 IST
  • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
  • 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஏப்ரல்-19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

28-ந்தேதி (வியாழக்கிழமை)-கரூர், ஈரோடு, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1-ந் தேதி (திங்கட்கிழமை)-திருநெல்வேலி, தென்காசி, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-கன்னியாகுமரி, 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News