தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

Published On 2024-01-31 10:34 GMT   |   Update On 2024-01-31 10:34 GMT
  • மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
  • மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை:

மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மேலும் மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு உரிய முடிவு எடுத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

Tags:    

Similar News