தமிழ்நாடு செய்திகள்

சென்னை, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

Published On 2025-12-31 16:57 IST   |   Update On 2025-12-31 16:57:00 IST
  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
  • திருவாரூர், நாகை, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. சூரியன் காலை 7 மணிக்குப் பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு இருக்கும் நேரத்தில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவையின் காட் (ghat) பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News