தமிழ்நாடு

பூசாரிகள் முகங்களில் அச்ச உணர்வு... அடுத்த கணையை தொடுத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2024-01-22 04:43 GMT   |   Update On 2024-01-22 05:34 GMT
  • நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.
  • பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என கூறியுள்ளார்.

முன்னதாக தி.மு.க. அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக பஜனை பாடுவது, எல்.இ.டி. திரையில் ஒளிப்பரப்புவதில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு மீது நேரடியாக குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியும் இதுபோன்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News