தமிழ்நாடு செய்திகள்
அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்... எடப்பாடி பழனிசாமி
- சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது.
- அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?
சென்னை:
சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்பதால் கவர்னரிடம் மனு அளித்தோம்.
* சபாநாயகரை மதிக்கிறோம்... அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்.
* சட்டசபையில் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.
* சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது.
* அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?
* சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான்.
* வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.